புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கும். மேலும் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவுகின்றனர். இந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பந்த்ஜு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் கொல்லப்பட்ட பயங்கவாதிகளிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படை தரப்பில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.