சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 62 ஆயிரத்து 598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 964 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.