தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 77 செங்கல்பட்டு - 1,184 சென்னை - 7,804 கோவை - 3,118 கடலூர் - 654 தர்மபுரி - 375 திண்டுக்கல் - 213 ஈரோடு - 801 கள்ளக்குறிச்சி - 244 காஞ்சிபுரம் - 398 கன்னியாகுமரி - 542 கரூர் - 241 கிருஷ்ணகிரி - 445 மதுரை - 564 நாகை - 341 நாமக்கல் - 646 நீலகிரி - 277 பெரம்பலூர் - 67 புதுக்கோட்டை - 225 ராமநாதபுரம் - 109 ராணிப்பேட்டை - 262 சேலம் - 1,737 சிவகங்கை - 131 தென்காசி - 104 தஞ்சாவூர் - 311 தேனி - 97 திருப்பத்தூர் - 278 திருவள்ளூர் - 1,116 திருவண்ணாமலை - 421 திருவாரூர் - 376 தூத்துக்குடி - 474 திருநெல்வேலி - 272 திருப்பூர் - 976 திருச்சி - 510 வேலூர் - 437 விழுப்புரம் - 338 விருதுநகர் - 189 விமானநிலைய கண்காணிப்பு - 2