தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 77
செங்கல்பட்டு - 1,184
சென்னை - 7,804
கோவை - 3,118
கடலூர் - 654
தர்மபுரி - 375
திண்டுக்கல் - 213
ஈரோடு - 801
கள்ளக்குறிச்சி - 244
காஞ்சிபுரம் - 398
கன்னியாகுமரி - 542
கரூர் - 241
கிருஷ்ணகிரி - 445
மதுரை - 564
நாகை - 341
நாமக்கல் - 646
நீலகிரி - 277
பெரம்பலூர் - 67
புதுக்கோட்டை - 225
ராமநாதபுரம் - 109
ராணிப்பேட்டை - 262
சேலம் - 1,737
சிவகங்கை - 131
தென்காசி - 104
தஞ்சாவூர் - 311
தேனி - 97
திருப்பத்தூர் - 278
திருவள்ளூர் - 1,116
திருவண்ணாமலை - 421
திருவாரூர் - 376
தூத்துக்குடி - 474
திருநெல்வேலி - 272
திருப்பூர் - 976
திருச்சி - 510
வேலூர் - 437
விழுப்புரம் - 338
விருதுநகர் - 189
விமானநிலைய கண்காணிப்பு - 2