அடுத்தடுத்து விடுமுறை ... நேற்று சென்னை இருந்து வெளியூர்களுக்கு 2732 பஸ் இயக்கம்

சென்னை: நாட்டின் சுதந்திரதினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சுதந்திரதினம் என்று மொத்தம் 3 நாட்கள் விடுமுறை

எனவே இந்த தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று சென்னை இருந்து வெளியூர்களுக்கு 2732 பஸ் இயக்கப்பட்டது.இதில் திருச்சி , மதுரை மற்றும் சேலம்திற்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி பட்டனர.