கடலூரில் டெங்கு காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதி


கடலூர் : டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது. இதையடுத்து சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது.

மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையே தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோன்று செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலுர் அரசு மருத்துவமனையில் மட்டும் 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 280 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யபட்டுள்ளது.