கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 371 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 371பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக கனடா உள்ளது.

இங்கு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 6 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 749பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,482 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70,574பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,152பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.