தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வந்தவர்களில் 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். ரெயில் நிலைய கண்காணிப்பில் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 44 செங்கல்பட்டு - 2,665 சென்னை - 22,610 கோவை - 331 கடலூர் - 427 தர்மபுரி - 53 திண்டுக்கல் - 189 ஈரோடு - 73 கள்ளக்குறிச்சி - 484 காஞ்சிபுரம் - 1,148 கன்னியாகுமரி - 221 கரூர் - 34 கிருஷ்ணகிரி - 99 மதுரை - 1,708 நாகை - 168 நாமக்கல் - 11 நீலகிரி - 57 பெரம்பலூர் - 6 புதுக்கோட்டை - 116 ராமநாதபுரம் - 594 ராணிப்பேட்டை - 300 சேலம் - 493 சிவகங்கை - 152 தென்காசி - 168 தஞ்சாவூர் - 241 தேனி - 537 திருப்பத்தூர் - 121 திருவள்ளூர் - 1,388 திருவண்ணாமலை - 1,009 திருவாரூர் - 292 தூத்துக்குடி - 277 திருநெல்வேலி - 217 திருப்பூர் - 63 திருச்சி - 339 வேலூர் - 964 விழுப்புரம் - 401 விருதுநகர் - 278