உரிமை தொகைக்கு மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு 4 மாத கால தொகை மொத்தமாக வரவு


சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை குடும்பத் தலைவிகள் 3 மாத காலம் உரிமைத் தொகையை பெற்று உள்ளனர்.

இதனை அடுத்து இத்திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பலரின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கும் அரசு மறு வாய்ப்பு அளித்தது.


அதன் பிறகு மேல் முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தற்போது மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மேல் முறையீடு செய்தவர்கள் பயனர்களாக இணைக்கப்படும் போது அவர்களுக்கு 4 மாத காலத்திற்கான தொகை ரூ. 4000 வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.