சென்னை: கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சிறப்பு முகாம்களில் 41.52 லட்சம் மின்
இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று (டிச.1) வரை 41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது,
இதன்படி கடந்த 5 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. 41.52
லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்
பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மின் இணைப்பு
எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இன்று 2,811 பிரிவு அலுவலர்
சிறப்பு முகாம்கள் மூலம் 3.77 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனிலும் 3.01
லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 41.52 இதுவரை ஒரு லட்சம்
மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. என்று கூறினார்.