தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 337 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 165
செங்கல்பட்டு - 2,281
சென்னை - 10,012
கோவை - 4,559
கடலூர் - 2,207
தர்மபுரி - 1,006
திண்டுக்கல் - 605
ஈரோடு - 1,110
கள்ளக்குறிச்சி - 863
காஞ்சிபுரம் - 1,105
கன்னியாகுமரி - 667
கரூர் - 493
கிருஷ்ணகிரி - 848
மதுரை - 759
நாகை - 865
நாமக்கல் - 947
நீலகிரி - 710
பெரம்பலூர் - 104
புதுக்கோட்டை - 810
ராமநாதபுரம் - 215
ராணிப்பேட்டை - 567
சேலம் - 2,273
சிவகங்கை - 287
தென்காசி - 636
தஞ்சாவூர் - 1,218
தேனி - 512
திருப்பத்தூர் - 640
திருவள்ளூர் - 1,667
திருவண்ணாமலை - 1,106
திருவாரூர் - 843
தூத்துக்குடி - 775
திருநெல்வேலி - 934
திருப்பூர் - 1,563
திருச்சி - 808
வேலூர் - 896
விழுப்புரம் - 903
விருதுநகர் - 340
விமானநிலைய கண்காணிப்பு - 49
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2