தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 337 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 165 செங்கல்பட்டு - 2,281 சென்னை - 10,012 கோவை - 4,559 கடலூர் - 2,207 தர்மபுரி - 1,006 திண்டுக்கல் - 605 ஈரோடு - 1,110 கள்ளக்குறிச்சி - 863 காஞ்சிபுரம் - 1,105 கன்னியாகுமரி - 667 கரூர் - 493 கிருஷ்ணகிரி - 848 மதுரை - 759 நாகை - 865 நாமக்கல் - 947 நீலகிரி - 710 பெரம்பலூர் - 104 புதுக்கோட்டை - 810 ராமநாதபுரம் - 215 ராணிப்பேட்டை - 567 சேலம் - 2,273 சிவகங்கை - 287 தென்காசி - 636 தஞ்சாவூர் - 1,218 தேனி - 512 திருப்பத்தூர் - 640 திருவள்ளூர் - 1,667 திருவண்ணாமலை - 1,106 திருவாரூர் - 843 தூத்துக்குடி - 775 திருநெல்வேலி - 934 திருப்பூர் - 1,563 திருச்சி - 808 வேலூர் - 896 விழுப்புரம் - 903 விருதுநகர் - 340 விமானநிலைய கண்காணிப்பு - 49 ரெயில் நிலைய கண்காணிப்பு - 2