காவல் நிலையத்தில் மது அருந்தி நடனமாடிய காவலர் 5 பேர் சஸ்பெண்ட்

ஜார்கண்ட்: பணியிடை நீக்கம்... ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்நிலையத்தில் மது அருந்திவிட்டு நடனமாடிய 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது காவல் நிலையத்தில் 5 காவலர்கள் குடித்துவிட்டு நடனமாடியது தெரிகிறது. அதுமட்டுமின்றி இணையத்தில் இது தொடர்பான வீடியோவையும் பதிவு செய்தனர்.

காவல் நிலையத்திற்குள் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஐந்து போலீசார் குடித்துவிட்டு நடனமாடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.