தமிழகத்தில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 4 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரெயில்களில் வந்த 377 பேரும் அடங்குவர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 88 செங்கல்பட்டு - 2,349 சென்னை - 15,042 கோவை - 1,193 கடலூர் - 395 தர்மபுரி - 252 திண்டுக்கல் - 815 ஈரோடு - 172 கள்ளக்குறிச்சி - 709 காஞ்சிபுரம் - 2,130 கன்னியாகுமரி - 1,559 கரூர் - 81 கிருஷ்ணகிரி - 170 மதுரை - 3,273 நாகை - 152 நாமக்கல் - 151 நீலகிரி - 312 பெரம்பலூர் - 41 புதுக்கோட்டை - 447 ராமநாதபுரம் - 980 ராணிப்பேட்டை - 952 சேலம் - 898 சிவகங்கை - 816 தென்காசி - 678 தஞ்சாவூர் - 616 தேனி - 1,287 திருப்பத்தூர் - 205 திருவள்ளூர் - 3,317 திருவண்ணாமலை - 1,459 திருவாரூர் - 251 தூத்துக்குடி - 1,992 திருநெல்வேலி - 1,380 திருப்பூர் - 253 திருச்சி - 977 வேலூர் - 1,673 விழுப்புரம் - 781 விருதுநகர் - 2,071