அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை .. அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 1 மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவிப்பு ...

போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை புதிய அறிவிப்பில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு என்று பிரத்யோக இருக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் பெண்கள் தனியாக பயணம் செய்ய தயங்குகின்றனர் என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர்,

பெண்களுக்கு பிரத்யோகமாக அதிக இருக்கையில் வழங்கப்பட்டால் அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புவார்கள் என அவர் கூறினார்.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு என்று தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும், எனவும் பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை இணையதளத்தில் முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.