தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் மாவட்ட வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 95 செங்கல்பட்டு - 2,549 சென்னை - 15,127 கோவை - 1,259 கடலூர் - 448 தர்மபுரி - 271 திண்டுக்கல் - 893 ஈரோடு - 195 கள்ளக்குறிச்சி - 663 காஞ்சிபுரம் - 2,187 கன்னியாகுமரி - 1,465 கரூர் - 88 கிருஷ்ணகிரி - 153 மதுரை - 3,263 நாகை - 147 நாமக்கல் - 164 நீலகிரி - 339 பெரம்பலூர் - 44 புதுக்கோட்டை - 515 ராமநாதபுரம் - 1,030 ராணிப்பேட்டை - 1007 சேலம் - 850 சிவகங்கை - 873 தென்காசி - 764 தஞ்சாவூர் - 665 தேனி - 1,310 திருப்பத்தூர் - 172 திருவள்ளூர் - 3,457 திருவண்ணாமலை - 1,572 திருவாரூர் - 293 தூத்துக்குடி - 2,077 திருநெல்வேலி - 1,458 திருப்பூர் - 250 திருச்சி - 1,046 வேலூர் - 1,587 விழுப்புரம் - 777 விருதுநகர் - 1,909 விமானநிலைய கண்காணிப்பு - 370 ரெயில் நிலைய கண்காணிப்பு - 16