தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகுது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1079 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நோய் பாதிப்பில் இருந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 53,762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.