தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 56,021 பேர் குணமடைந்தனர் - மாவட்ட வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,321 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 3 ஆயிரத்து 95 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை:-
அரியலூர் - 425
செங்கல்பட்டு - 3,014
சென்னை - 38,947
கோவை - 231
கடலூர் - 775
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 300
ஈரோடு - 80
கள்ளக்குறிச்சி - 379
காஞ்சிபுரம் - 888
கன்னியாகுமரி - 165
கரூர் - 117
கிருஷ்ணகிரி - 43
மதுரை - 887
நாகை - 100
நாமக்கல் - 87
நீலகிரி - 41
பெரம்பலூர் - 156
புதுக்கோட்டை - 73
ராமநாதபுரம் - 265
ராணிப்பேட்டை - 462
சேலம் - 288
சிவகங்கை - 96
தென்காசி - 204
தஞ்சாவூர் - 274
தேனி - 191
திருப்பத்தூர் - 55
திருவள்ளூர் - 2,648
திருவண்ணாமலை - 910
திருவாரூர் - 224
தூத்துக்குடி - 727
திருநெல்வேலி - 614
திருப்பூர் - 117
திருச்சி - 452
வேலூர் - 380
விழுப்புரம் - 582
விருதுநகர் - 249