தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,321 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 3 ஆயிரத்து 95 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை:- அரியலூர் - 425 செங்கல்பட்டு - 3,014 சென்னை - 38,947 கோவை - 231 கடலூர் - 775 தர்மபுரி - 39 திண்டுக்கல் - 300 ஈரோடு - 80 கள்ளக்குறிச்சி - 379 காஞ்சிபுரம் - 888 கன்னியாகுமரி - 165 கரூர் - 117 கிருஷ்ணகிரி - 43 மதுரை - 887 நாகை - 100 நாமக்கல் - 87 நீலகிரி - 41 பெரம்பலூர் - 156 புதுக்கோட்டை - 73 ராமநாதபுரம் - 265 ராணிப்பேட்டை - 462 சேலம் - 288 சிவகங்கை - 96 தென்காசி - 204 தஞ்சாவூர் - 274 தேனி - 191 திருப்பத்தூர் - 55 திருவள்ளூர் - 2,648 திருவண்ணாமலை - 910 திருவாரூர் - 224 தூத்துக்குடி - 727 திருநெல்வேலி - 614 திருப்பூர் - 117 திருச்சி - 452 வேலூர் - 380 விழுப்புரம் - 582 விருதுநகர் - 249