சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 5,750 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,588 ஆக உள்ளது. 5,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,97,091 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,747 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 335
அண்ணா நகர் - 473
தேனாம்பேட்டை - 230
தண்டையார்பேட்டை - 110
ராயபுரம் - 281
அடையாறு- 210
திரு.வி.க. நகர்- 295
வளசரவாக்கம்- 203
அம்பத்தூர்- 269
திருவொற்றியூர்- 158
மாதவரம்- 152
ஆலந்தூர்- 248
பெருங்குடி- 149
சோழிங்கநல்லூர்- 73
மணலி - 55