கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு, 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 064பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 11ஆயிரத்து 894பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60ஆயிரத்து
666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 450பேரின்
நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அத்துடன் இரண்டு இலட்சத்து 86ஆயிரத்து 504பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.