ம.பி., கவர்னர் மாளிகை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா; தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

மத்திய பிரதேச கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் குடியிருப்பில், ஆறு பேருக்கு கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பகுதியாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

ம.பி., மாநில கவர்னராக, லால்ஜி டாண்டன் பதவி வகித்து வருகிறார். கவர்னர் மாளிகையான ராஜ்பவன் ஊழியர்கள் குடியிருப்பில், ஊழியர் ஒருவரது மகனுக்கு, இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐந்து பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.