64 லட்சம் மோசடியாக பெற்றிருந்த மொபைல் இணைப்புகள் துண்டிப்பு

புதுடில்லி: தொலைத் தொடர்புத்துறை தகவல்... இந்தியாவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்த சுமார் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தொலைத்தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் உதவித் திட்டம், செல்போன் சிம் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் முக்கியமாக தேவையாக உள்ளது.

இந்நிலையில், ஆதார் அட்டையை வைத்து 9 இணைப்புகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் ஒரு சிலர் ஆயிரக்கணக்கான இணைப்புகள் பெற்றிருந்ததால் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்த சுமார் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.