கனடாவில் 24 மணிநேரத்தில் 641 பேர் கொரோனாவால் பாதிப்பு

24 மணிநேரத்தில் 641 பேருக்கு கொரோனா பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,350 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கை: 19 பேர் குணமடைந்தனர்... கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 858 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நாட்டில் இதுவரை 1796 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 957 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.