24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா... பாகிஸ்தான் மக்கள் அச்சம்

பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இங்கு கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 36 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மக்களுக்கு விடுத்த செய்தியில் பிற நாடுகளை போல் இங்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது.

எனவே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அங்கு கொரோனா பரவுவது அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.