தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 57 ஆயிரத்து 73 பேர் மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 707 பேர் சிகிச்சைக்கு பின் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:- அரியலூர் - 4 செங்கல்பட்டு - 239 சென்னை - 2,056 கோவை - 44 கடலூர் - 22 தர்மபுரி - 3 திண்டுக்கல் - 37 ஈரோடு - 8 கள்ளக்குறிச்சி - 22 காஞ்சிபுரம் - 100 கன்னியாகுமரி - 33 கரூர் - 9 கிருஷ்ணகிரி - 14 மதுரை - 222 நாகை - 4 நாமக்கல் - 5 நீலகிரி - 2 பெரம்பலூர் - 3 புதுக்கோட்டை - 21 ராமநாதபுரம் - 59 ராணிப்பேட்டை - 29 சேலம் - 27 சிவகங்கை - 38 தென்காசி - 15 தஞ்சாவூர் - 20 தேனி - 51 திருப்பத்தூர் - 11 திருவள்ளூர் - 222 திருவண்ணாமலை - 53 திருவாரூர் - 5 தூத்துக்குடி - 36 திருநெல்வேலி - 25 திருப்பூர் - 8 திருச்சி - 60 வேலூர் - 49 விழுப்புரம் - 33 விருதுநகர் - 69