தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். நோய் தொற்று பரவியவர்களில் நேற்று 1 ஆயிரத்து 157 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 10 செங்கல்பட்டு - 516 சென்னை - 3,017 கோவை - 991 கடலூர் - 102 தர்மபுரி - 92 திண்டுக்கல் - 133 ஈரோடு - 296 கள்ளக்குறிச்சி - 22 காஞ்சிபுரம் - 248 கன்னியாகுமரி - 171 கரூர் - 94 கிருஷ்ணகிரி - 120 மதுரை - 290 நாகை - 123 நாமக்கல் - 218 நீலகிரி - 140 பெரம்பலூர் - 4 புதுக்கோட்டை - 73 ராமநாதபுரம் - 26 ராணிப்பேட்டை - 64 சேலம் - 321 சிவகங்கை - 51 தென்காசி - 41 தஞ்சாவூர் - 169 தேனி - 85 திருப்பத்தூர் - 26 திருவள்ளூர் - 466 திருவண்ணாமலை - 100 திருவாரூர் - 106 தூத்துக்குடி - 102 திருநெல்வேலி - 138 திருப்பூர் - 507 திருச்சி - 174 வேலூர் - 265 விழுப்புரம் - 88 விருதுநகர் - 92 விமானநிலைய கண்காணிப்பு - 14