தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்த 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஆனாலும் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,52,567 ஆக உள்ளது. ஆனால் தற்போது 9,874 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-