மருத்துவமனைக்கு நிதி திரட்டி சாதித்த இரு கால்களையும் இழந்த சிறுவன்

ஐந்து வயது சிறுவனின் சாதனை... சிறுவயதாக இருந்தவேளை பெற்றோர் ஏற்படுத்திய காயத்தால் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனைக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டி சாதனை படைத்துள்ளான்.

டோனி ஹெட்கெல் என்னும் அந்தச் சிறுவன் தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வருகிறான்.இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றிய கேப்டன் டொம் மூர், அண்மையில் கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்தான் குறித்த சிறுவன்.

தானும் அதே போல் நிதி திரட்டி சிறு வயதில் தன் உயிரைக் காப்பாற்றிய லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்க முடிவெடுத்தான்.
தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டான். ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை சேர்ந்துள்ளது.