திருச்சி அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ

திருச்சி, சமயபுரம் அருகே நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது காருக்குள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து காரை நிறுத்திவிட்டு, காருக்குள் இருந்த 4 பேரும் வெளியேறினர். தீ மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ பிடித்தவுடன் காருக்குள் இருந்த 4 பேரும் வெளியேறியதால் உயிர் தப்பினர்.