தனக்கு புற்றுநோயால் மரணம் என்பதை கணித்து மனைவிக்கு விவாகரத்து அளித்த மருத்துவர்

ஆஸ்திரேலியா: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மருத்துவர்... ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இவரின் மரணத்தை முன்னரே கணித்து தனது மனைவிக்கு விவாகரத்து செய்து தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த 33 வயதான ஹர்ஷவர்த்தனன், ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ளார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, தனது மரணம் உறுதியானது என்பதை அறிந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன் மரணத்தை தெரிந்து கொண்ட அவர் தனக்குப் பிறகு தனது குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைத்து நிதி தேவைகளையும் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தான் இறந்த பிறகு மனைவி தனியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவரை விவாகரத்து செய்யும்படி வற்புறுத்தினார். மேலும் அவர் இறந்த பிறகு அவரது உடலை இந்தியா கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துள்ளார். அவரது செயல் பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.