தாராளமாக நண்பர்களுக்கு பணத்தை வாரியிறைத்த சிறுமி

புளோரிடா: நண்பர்களுக்கு பணத்தை வாரியிறைத்த சிறுமி... வடக்கு புளோரிடா நடுநிலைப் பள்ளியில் 14 வயது சிறுமி ஒருவர் தன் நண்பர்களிற்கு $10,000-க்கும் அதிகமான பணத்தைக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வியாழன் அன்று சம்மர்ஃபீல்டில் உள்ள லேக் வீர் நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவி ஒருவர் வகுப்புத் தோழர்களுக்கு தலா நூற்றுக்கணக்கான டொலர்களை வழங்குகிறார் என கிடைத்த தகவலையடுத்து மரியன் கவுண்டி பிரதிநிதிகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.

பள்ளி அதிகாரிகள் சிறுமியின் பையை சோதனை செய்ததில் சுமார் $2,500 கிடைத்ததாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். அந்த பணம் குறித்து அதிகாரிகள் சிறுமியிடம் வினவிய போது அறியப்படாத முன்னாள் மாணவர் ஒருவர் தன்னிடம் பணத்தைக் கொடுத்ததாகவும், அதை அனைவருக்கும் கொடுக்க விரும்புவதாகவும் அந்த இளம்பெண் கூறினார்.

ஆனால் உண்மையில் அச் சிறுமி தனது பாட்டியின் வீட்டுப் பெட்டகத்தை உடைத்து அந்த பெண்ணின் சேமிப்பில் சுமார் 13,500 டொலர்களை திருடிச் சென்றுவிட்டதாக விசாரணையாளர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் எதற்காகப் பணத்தை எடுத்தாள் என்றோ அல்லது தன் வகுப்புத் தோழிகளுக்கு எதற்காகக் கொடுத்தாள் என்றோ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை .

வெள்ளிக்கிழமைக்குள், மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தில் சுமார் 700 டாலர்களை அதிகாரிகள் மீட்டனர். அந்தப் பணமும், சிறுமியின் பையில் இருந்து மீட்கப்பட்ட 2,500 டொலர்களும் பாட்டியிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.