சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ரஷ்யா: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதில் 12 பயணிகளும், 3 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்றவர்கள் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.