அல்ஜீரியா நாட்டு பெண்ணை திருமணம் செய்த புதுச்சேரி இளைஞர்

புதுச்சேரி: அல்ஜீரியா பெண்ணை திருமணம் செய்தார்... புதுச்சேரியை சேர்ந்த இளைஞருக்கும், அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

புதுச்சேரியை சேர்ந்த கணினி பொறியாளரான அபிலாஷ் நெதர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பாத்திமாவும், அபிலாஷும் காதலித்து வந்தனர்.

மணமகனின் பெற்றோர் சம்மதத்துடன் புதுச்சேரி வள்ளலார் அவையில் திருமணம் நடைபெற்றது. உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும், வள்ளலாரின் திருமுறையின் மீதும் மணமக்கள் திருமண உறுதிமொழி ஏற்றனர்.

திருமண விழாவில் மணமகன் அபிலாஷின் பெற்றோர், நண்பர்கள், சன்மார்க்க சங்கத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.