விவசாயிகள் பயிர்க்கடன், நிவாரணம் பெற ஏதுவாக ஒரே இணையதளம்

சென்னை: விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் Grains எனும் புதிய இயங்குதளத்தை உருவாகியுள்ளது தமிழக அரசு. எனவே அதன்படி, உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் (GRAINS) எனும் புதிய இயங்குதளத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை உருவாக்கி உள்ளது.

இதையடுத்து விவசாயிகள் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அவர்கள்பெரும் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த இயங்குதளம் மூலம் பயிர்க்கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் என்று இனி எதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் ஆதார் எண், நில விவரம், பயிர் சாகுபடி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இந்த புதிய (GRAINS) or (GRAINS) எனும் இயங்குதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல துறைகளில் திட்டப் பயன்களை பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாவதை தவிர்க்கவும், இதன் மூலம் அரசின் பயன்கள் சரியான பயனாளர்களை சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசுக்கும் விவசாயிகளுக்குமான இடைவெளி குறைய இணையதளம் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.