ஈரானில் நேற்று திடீரென நிலநடுக்கம்

ஈரான் : 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் .... ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

அங்கு தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் இதன் அளவு 5.9 ரிக்டர் அளவாக பதிவானது. இந்நிலநடுக்கத்தின் விளைவாக 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தகவல் படி, இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது .ஈரானின். அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல்வேறு நகரங்களிலும் இது உணரப்பட்டது .

கோய் என்பது ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள கோய் கவுண்டியின் ஒரு நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இந்தநிலநடுக்கத்தால் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.