ஆதார் – பான் இணைப்பு இன்னைக்கு செய்யலாட்டி நாளைக்கு செயல் இழக்கும்

புதுடில்லி: ஆதார் - பான் இணைப்புக்கு இன்றே இறுதி நாள். ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு நாளை முதல் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வருமான வரிச்சட்டத்தின் கீழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பான் கார்டை ஆதாருடன் இணைத்துக் கொள்ள ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.