ஆட்சியின் மீதான அதிருப்தியை மறைக்க குற்றம்சாட்டும் முதல்வர்: பாஜக அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஆட்சியின் மீதான அதிருப்தியை மறைக்கவே மத்திய அரசின் மீது முதல்வர் குற்றம்சாட்டுகிறார் என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்பதை அறிந்து, முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கலைஞர் கோட்டத்தைத் திறக்க நிதிஷ் குமார் வருகை தராதது, அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட முடியவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது என்றார்.