நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன்; நடிகை குஷ்பு

நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தார். இது தொடர்பாக அவர் அக்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் குஷ்பு கூறியதாவது:-

காங்கிரசில் இருந்தபோது பல விவகாரங்களில் பாஜகவை ஆதரித்துள்ளேன். ஆளுங்கட்சியை விமர்சிப்பதே எதிர்க்கட்சிகளின் விதிமுறை. நாட்டிற்கு எது நல்லது என்பது போகப்போக புரிந்தது. மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு. நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.