சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: இன்று ஒருநாள் மட்டும், நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ... விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குப் பதிலாக, 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள, பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே இன்று மட்டும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.