கூடுதல் வழித்தடங்களில் விமான சேவைகள் வழங்குகிறது அகசா ஏர் நிறுவனம்

மும்பை : கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட அகசா ஏர் நிறுவனம் இந்தியாவில் வர்த்தக விமானங்களை இயக்குகிறது. ஆரம்பத்தில் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு விமான சேவையை வழங்கிய நிறுவனம் இப்போது கூடுதல் வழித்தடங்களில் பயணிகளுக்கு விமானங்களை வழங்குகிறது.

இந்நிலையில், பயணிகளை தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அகாசா ஏர் நிறுவனம் அனுமதித்துள்ளது. பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் செல்லப் பிராணிகள் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படும் என அகசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக அகசா ஏர் ஆனது.

நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வீட்டு செல்லப்பிராணிகளை தனது விமானங்களில் பயணிக்க அனுமதிக்கும் ஒரே நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே.