இலங்கையில் வரும் 26ம் தேதி முதல் விமான நிலையங்கள் திறப்பு?

விமான நிலையங்கள் திறப்பு குறித்து தகவல்.... இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வணிக மற்றும் விசேட விமான சேவைகளை முதலில் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். கட்டுநாயக்க, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பது தொடர்பிலான நிரந்தர திகதி எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும உபுல் தர்மதாச தெரிவித்தார்.