புதுடில்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு

புதுடில்லி: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்... புதுடில்லியில் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தததையடுத்து போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் உடனடியாக பள்ளிக்கு சென்று, மோப்ப நாய் உதவியுடன் முழுமையாக சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 12-ம் தேதி, மதுரா சாலையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு, அந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.