நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை அதிகரிப்பு

நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:நோபல் பவுண்டேசனின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு வரும் அக்.,5க்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டது. தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.