சீனா: கொரோனாவால் முதியவர் பலி... சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை, ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ஆனால் இந்த மாதம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்து, தினமும் 25,000 எண்ணிக்கைகள் வரை பதிவாகியுள்ளன. இருப்பினும், அங்கு கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
சீனாவில் கடைசியாக மே 26-ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். அதன்பிறகு 5
மாதங்களுக்கும் மேலாக அங்கு கொரோனா இறப்பு எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில்
சீனாவின் பெய்ஜிங்கைச் சேர்ந்த 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,227 ஆக உயர்ந்துள்ளது.