தஞ்சை மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.


இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது ஆண் மற்றும் 69 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 205 பேர் பலியாகி உள்ளனர்.