ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

பைசாபாத்: மீண்டும் நிலநடுக்கம் .... ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில் இன்று காலை சுமார் 6.47 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுவுள்ளது.

இதையடுத்து மித அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தகவல் தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் 1 மாதத்தில் மட்டும் 2-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். கடந்த ஜனவரி 22-ம் தேதி அந்த நாட்டின் பைசாபாத் நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 79 கி.மீ.

தொலைவில் காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியிருந்தது.