மல்லையாவிடம் இருந்து இன்னும் ரூ. 11 ஆயிரம் கோடி வரணுமாம்

11 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டி உள்ளது என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு சொந்தமான யுனைடெட் பிவரேஜஸ் நிறுவனத்திடம் இருந்து இதுவரை 3600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இனியும் 11 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டி உள்ளது என்றும் வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான கம்பெனி செலுத்த வேண்டிய கடன் நிலுவையை ஈடு செய்ய யுனைடெட் பிவரேஜஸ் நிறுவனத்தை விற்கலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், யுனைடெட் பிவரேஜஸ் நிறுவனத்தை விற்று கடனை ஈட்டிக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.