ஜனாதிபதி ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சி முக்கிய புள்ளிக்கு பதவி

இலங்கை: ஜனாதிபதி ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சி முக்கிய புள்ளிக்கு பதவி கிடைக்க உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த இருவரும் ஒரே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு அண்மையில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.