ஒரு நாளில் 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுவழங்கும்போது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும்.

ஒரு நாளில் காலையில் நூறு பேருக்கும், பிற்பகலில் நூறு பேருக்கும் என 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொங்கல் பரிசுத்தொகையை வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.