விருத்தாசலத்தில் வரும் ஆக. 19ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருத்தாசலம் : தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

இதையடுத்து அதன் படி மாவட்டம் வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் தினம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வரை 18 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் 30- ஆம் தேதிக்குள் மீதம் உள்ள இடங்களிலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்ற உள்ளார்.

மேலும் சுமார் 40 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாமனது விருதாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.