சாத்தான்குளம் வழக்கில் 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் மறுப்பு.. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 காவலர்களின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவலர் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.