வாழை விவசாயிகள் மகிழ்ச்சி... ஐயப்ப சீசனில் ஸ்டார்ட் ஆனதால் இலை விலை உயர்வு

பெரியகுளம்: ஐயப்ப சீசனில் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,500 ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது.

வாழையை அறுவடை செய்த பின் வாழை மரங்களில் இருந்து 2 முதல் 3 ஆண்டுகளுக்கு வாழை இலைகளை அறுவடை செய்வது வழக்கம். இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வாழைகள் செழித்து வளர்ந்துள்ளன.

தற்போது வாழை இலை அறுவடை நடந்து வருகிறது. ஐயப்ப சீசன் துவங்கியுள்ள நிலையில் வாழை இலைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துக்கு முன், ஒரு கட்டு வாழை இலை ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. தற்போது ஒரு மூட்டை ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு மூட்டை ரூ.2,500 ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ரூ.1,200-க்கு விற்கிறது. இந்த விலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். விலையும் உயர வாய்ப்புள்ளது.